2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

Princiya Dixci   / 2021 மே 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலையில்  உவர்மலை, அன்புவழிபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகள் நேற்று (01)  முதல் முடக்கப்பட்டன.

திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணத்தால், நேற்று மாலை உவர்மலை பகுதியும், இரவு 7 மணியளவில் அன்புவழிபுரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளும் இவ்வாறு முடக்கப்பட்டன.

சில தினங்களாக அன்புவழிபுரம், உவர்மலை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் இப்பகுதிகள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X