2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருடிய நகைகளை வைத்திருந்தவர் கைது

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் திருடிய நகைகளை வைத்திருந்த ஒருவரை நேற்று (28) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர, பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மூன்று பவுண் திருடிய நகைகளை வைத்திருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர் ஒருவர் திருடி விற்பனை செய்வதற்காக கொடுத்ததாக, ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதுடன், மற்றைய நகைகளைத் திருடிய நபரையும் கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .