Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ATM அட்டையை திருடி பண மோசடியில் ஈடுபட்ட தாயை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது 16 வயது மகனை ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறும் இன்று (01) திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
இவ்வாறு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சீனக்குடா,திமுதுகம, சமகி மாவத்தையைச்சேர்ந்த 34 வயதுடைய தாயாரும் 16 வயதுடைய மகனும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கிண்ணியா, தள வைத்தியசாலை சுத்திகரிப்பு பிரிவின் மேற்பார்வையாளராக கடமையாற்றும் திருகோணமலை, என்.சீ .வீதியைச் சேர்ந்த அமதூறு துப்பஹிகே வசந்தி சமன்திகா என்பவருடைய சம்பத் வங்கி ATM அட்டையை அவரது பயணப்பையிலிருந்து திருடி ஹற்றன் நஷனல் வங்கி கிண்ணியா கிளையில் ஜம்பதாயிரம் ரூபாயினை பெற்றுக்கொண்டமை தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்முறைப்பாட்டை விசாரணை செய்த, கிண்ணியா பொலிஸார் தாயையும் மகனையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இக்கட்டளையை பிறப்பித்தார்.
அத்துடன், தமது வங்கி அட்டைகளை பயணப்பையில் வைத்திருப்பவர்கள் அதே இடத்திலோ அல்லது அட்டைக்கு பின்புறமாகவோ இரகசிய இலக்கத்தை காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
19 Apr 2024