2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருத்தியமைக்கப்படாத மூதூர் மணிக்கூட்டுக்கோபுரம்

Editorial   / 2018 மே 29 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.நௌபர் 

மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட் மூதூர், புளியடிச் சந்தியிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திலுள்ள மணிக்கூடுகள் பழுதடைந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் புனரமைக்கப்படவில்லையென,  பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - மூதூர் பிரதான வீதியின் நாற்சந்தியில் இந்த மணிக்கூட்டுக்கோபுரம் அமைந்துள்ளது.

இந்த மணிக்கூட்டு கோபுரம் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் மயானம், பாடசாலைகள், பஸ்தரிப்பு நிலையம் ஆகியன அமைந்திருப்பதால், இந்த மணிக்கூட்டுக் கோபுரமானது, மக்கள் சரியான நேரத்தை அறிந்து செயற்படுவதற்கு முக்கியமானது.

எனவே, இந்த மணிக்கூட்டுக்கோபுரத்தை புனரமைக்க உரிய பகுதியினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .