2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேசிய பாடசாலை இடமாற்றத்துக்கு ’எனது தலையீடு இல்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தேசிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக, தேசிய பாடசாலைகளில் மூன்று கட்டமாக இடமாற்றத்துக்கு, தன்னுடைய தலையீடு இல்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இந்த இடமாற்றத்துக்கான இரண்டாம் பகுதியே, கிண்ணியா மத்திய கல்லூரியில், கடந்த வாரம் நடைபெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இடமாற்றத்தில், தன்னுடைய தலையீடோ, சிபாரிசோ சிறிதளவும் கிடையாது என்று என்று கூறியுள்ளார்.

தேசிய இடமாற்ற கொள்கைக்கு முரணாக, யாராவது இடமாற்றப்பட்டிருப்பின் தகுந்த ஆதாராங்களுடன் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அதற்கான பூரண ஒத்துழைப்பை, தான் வழங்கத் தயராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .