2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தொழில் முனைவோருக்கான மாநாடு...

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான முயற்சியாண்மை கல்வி தொடர்பான மாநாடு, கிழக்கு மாகாண கடற்படைத் தலைமையகத் திருகோணமலைக் கேட்போர் கூடத்தில், இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

நாளைமறுநாள் (11) வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், கைத்தொழில் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய முயற்சியாளர் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தக்சித போகொல்லாகம தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், 21 நாடுகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X