2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தோணி கவிழ்ந்து வயோதிபர் பலி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை - கிண்ணியா, சுங்கான் குழி குளத்தில் மீன்பிடிக்க நேற்றிரவு (10) தோணியில் சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல்போயிருந்த கிண்ணியா, நடு ஊற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் அப்துல் சலாம் (வயது -78) என்பவர், இன்று (11) அதிகாலை மேற்படி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான  விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .