2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நல்லாட்சியை இணைந்தே கொண்டு வந்தோம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

“நல்லாட்சியை நாங்களும் இணைந்தே கொண்டு வந்தோம். இந்த நல்லாட்சி அரசாங்கம், எமது தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் புறக்கணிப்பை ஏற்படுத்தியுள்ளது” என, எதிர்க்கட்சித் தலைவர் இரா .சம்மந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் பல்கலைக்கழக வளாகத்தின் நேற்று (08) புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம போன்றோர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களை விருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X