2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை ஆர்ப்பாட்டம்

தீஷான் அஹமட்   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைக் கண்டித்து, ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, மூதூர் பெற்றோல் செட் சந்தியில் நாளை  (06) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக மூதூரில்  வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாதவும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் மூதூரில் மணலை ஏற்றி, வாகனங்களில் வேகமாகப் பயணிப்பதால் வீதி விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .