2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நினைவு தினம்

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தில், கடந்த யுத்த காலத்தில் பன்குளத்தில் வைத்து படுகொலைச் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் நினைவு தின வைபவம், திருகோணமலையில், நேற்று (24) நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தாமோதரபிள்ளை வரதராஜனித் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை விவேகானந்தா கல்லுரியில் கல்வி பயின்றுவரும் வறுமைக் கோட்டுக்குப்பட்டு சுமார் 30 மாணவர்களுக்கு, சீருடை வழங்கப்பட்டது.

யுத்தகாலத்தில்,  பன்குளத்தில் வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாமோதரபிள்ளை சேதிப்பிள்ளை, பரமேஸ்வரி, ஜெயபாலன், மதி, புவனேஸ்வரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X