2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிறுவையில் குழறுபடிகள்; தவிசாளர் திடீர் விஜயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

 

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சில இறைச்சிக் கடைகளில் நிறுவைகளில் குழறுபடிகள் இடம்பெறுவதாகப் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து, பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் குழுவொன்று, நேற்று (31) திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து,   சகல கடைகளிலும் படித்தராசு தற்பொழுது பாவனையில் உள்ளமை தொடர்பில் அறிந்துகொண்டதுடன், சுகாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர் உட்பட சகலரும் சென்று ஆராய்ந்தனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான நிறுவை மோசடிகள் இடம்பெறா வண்ணம் இறைச்சிக் கடை உரிமையாளர்களை நடந்துகொள்ளுமாறும் தவிசாளர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .