2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பரீட்சையைத் தாமதிக்காதீர்’

வடமலை ராஜ்குமார்   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அண்மையில் கோரப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம் IIIக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த போட்டிப் பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என, கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதற்குப் பின்னர் கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் முடிவுற்ற நிலையில் காணப்படுகின்றமையும் தங்களுக்கான போட்டிப்பரீட்சை நடைபெறவில்லை என விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்போட்டிப் பரீட்சைக்கான முடிவுத் திகதி 2017.07.25 என கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .