2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பஸ் மார்க்கத்தில் மாற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலையிலிருந்து காலை 6.30 மணியளவில், கிண்ணியா ஊடாகக் கண்டிக்குச் செல்லும் பஸ், திரும்பி வரும்போது, கிண்ணியா ஊடாகச் செல்லாததால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக, கிண்ணியா நகரசபை உறுப்பினர்களான அனீஸ், எம்.எம். மஹ்தி ஆகியோர், இலங்கை போக்குவரத்துச் சபை மாவட்ட அத்தியட்சகரை சந்தித்து எடுத்துரைத்தனர்.

இதன்போது ஏற்பட்ட இணக்கத்தையடுத்து, நாளை (18) முதல், கண்டியில் இருந்து பிற்பகல் 2. 30 மணிக்குப் புறப்படும் பஸ், கிண்ணியா ஊடாகவே திருகோணமலைக்குத் திரும்பவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X