2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாடகர் இம்மானுவேல் காலமானார்

பொன் ஆனந்தம்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வானொலியின் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரான என்.இம்மானுவேல், இன்று (26) அதிகாலை 5.50 மணியளவில் காலமானார்.

கடந்த சில நாட்களாக கடும் சுகயீனமுற்று, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் காலமானார்.

“கோல் பேஸ் கடற்கரை”, “ஆண்டவனும் அடிமைப்பட்டான்”, “சித்திர கண்ணியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்”, “அவசரப்பட்டுத் திருமணம் செய்து அழுவதேனடா”, “புடிச்சாலும் பிடிச்சேனே” உள்ளிட்ட இவரது பாடல்கள் பல இன்றும் பிரபல்யமானவை.

அன்னாரின் சடலம், திருகோணமலை உவர்மலை இலக்கம்.31 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆராதனை நிகழ்வுகள், எதிர்வரும் வியாழக்கிழமை (28) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X