2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளில் விரல் அடையாள பதிவு இயந்திரங்கள்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுகளில் உள்ள சகல பாடசாலைகளிலும் உட்செல்லல் வெளிச்செல்லல் வருகையை உறுதிப்படுத்துவதற்காக, கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, கிண்ணியா பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.நளீம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்குள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு இயந்திரத்தை பொருத்துமாறும் இயந்திர கொள்வனவுக்காக கிண்ணிய வலயக் கல்வி அலுவலக கணக்காளரை தொடர்பு கொள்ளுமாறும்  அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .