2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாலியல் சேட்டை; இளைஞன் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் 6 வயதுச் சிறுவனிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில், 18 வயது இளைஞனை, இன்று (02) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 29ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவனுக்கு, முயல் காட்டுவதாக, வீதியால் சென்ற குறித்த இளைஞன், பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் சேட்டை புரிந்துள்ளாரென, சிறுவனின் உறவினர்கள், கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறைப்பாட்டையடுத்து, இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .