2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரச்சினைகளை ஆராய ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மணல் அகழ்வு, வனவிலங்கு, காணிப் பிரச்சினைகளை ஆராய, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் . ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருகோணமலையில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மணல் அகழ்வு சம்மந்தமாக ஆராய்ந்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, விசேட கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யுமாறு, ஆளுநரிடம் தான் கோரிக்கை முன்வைத்திருந்தாகத் தெரிவித்தார்.

இக்கோரிக்கையை ஏற்ற ஆளுநர், விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவுள்ளார் என்றும் அக்கலந்துரையாடலில் முப்படை உயரதிகாரிகள், வனவிலங்கு, தொல்பொருள் உயரதிகாரிகள், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

மணல் அகழ்வின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்தல், சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்தல், மணல் அகழ்வை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், முப்படையினருடனான சுமூக உறவு சம்மந்தமாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடி, தீர்வைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், இம்ரான் எம்.பி தெரிவித்தார்.

மேலும், படையினரின் வசமுள்ள பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் காணப்படும் பொதுமக்களின் காணிகளை முற்றாக விடுவித்தல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என படையினர் கருத்தும் காணிகளை அவர்கள் விடுவிக்கும் வரை நட்டஈடு, வாடகையை காணி உரிமையாளர்களுக்குப் பெற்றுகொடுப்பது தொடர்பான கோரிக்கைகளை படையினரின் முன்வைக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .