2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய கணினிக்கூடம் திறந்து வைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 05 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடத்திறப்பு விழாவும் இலத்திரனியல் பயிற்சி முகாமைத்துவத் தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும்,  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் கிழக்கு மாகாண முகாமைத்துவப் பயிற்சிப் பிரிவில் இன்று (05) நடைபெற்றது.

இப்புதிய கணினிக்கூடம், 50 பயிலுநர்கள் ஒரே தரத்தில் பயிற்சி பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகத்தர்கள் சகலரும் இப்பயிற்சிப் பிரிவுடன் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில், பயிற்சி முகாமைத்துவத் தரவுத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் செல்வி எம்.எம். ஹலீடா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .