2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:53 - 1     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆச்சிக்குளம் கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த  நடராசா போதநாயகி என்ற  (29 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி விரிவுரையாளரை,  நேற்று (20) முதல் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 1

  • வ.ஐ.ச.ஜெயபாலன் Saturday, 22 September 2018 01:28 AM

    கண்ணீரும் அஞ்சலிகளும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .