2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பேனா இலக்கிய விருது 2018 – விண்ணப்பம் கோரல்

Editorial   / 2018 மே 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  

கிண்ணியா பேனா இலக்கியப் பேரவை, இந்த வருடம் தனது எட்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, தேசிய ரீதியாக இலக்கிய நூல் விருதை அறிவிக்கவிருக்கிறது.

இவ்விருதுக்காக படைப்பாளிகள், தங்களது 2017ஆம் ஆண்டு வெளிவந்த கவிதை நூல்களில் இரண்டு பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டுமென வேண்டுகிறது.

போட்டி நிபந்தனைகளாக

01. நூல்கள், 2017.12.31க்கு முன்பாக வெளி வந்தவையாக இருத்தல் வேண்டும்.

02. சுய படைப்பாக இருத்தல் வேண்டும்

03. மொழிபெயர்ப்பு நூல்கள் இருத்தலாகாது

04. தேசிய நூலாக்கல் அதிகாரசபையின் பதிவு செய்யப்பட்ட (இலக்கம்) அச்சிடப்பட்டிருத்தல் வேண்டும்.

05. பிரதிகள் திருப்பி தரப்படமாட்டாது.

06.இரண்டு பிரதிகள்

07. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

08. தாமாக தயாரித்த விண்ணப்பத்துடன் நூல் அனுப்பப்படல் வேண்டும்.

09. தெரிவு செய்யப்படும் சிறந்த ஒரு நூலுக்கு  பெறுமதியான பணத் தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

10. போட்டி இறுதித் திகதிக்கு பிந்திய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

11. நூல்களை 2018.6.27 திகதிக்கு முன்பாக கிடைக்க கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
பணிப்பாளர்
ஜே.பிரோஸ்கான்
பேனா இலக்கியப் பேரவை
92/4, உமர் ரழி வீதி,
மகரூப் நகர்,
கிண்ணியா- 03.
அலைபேசி 0779300397, 0752203397


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X