2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண் டிப்பர்களுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளை நாவல் காட்டுப் பகுதியில் நிபந்தனையை மீறி மண் ஏற்றி வந்த டிரக்டர், டிப்பர் வாகனங்களுடன்  இருவரை  நேற்று (15) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

மூதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டைப் பறிச்சான் , ஹைரியா நகர் பிரதேசங்களை சேர்ந்த 29, 39 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதுடன், குறித்த வாகனங்களை மூதூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .