2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மனைவிக்கு தொல்லை கொடுத்தவரை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, அக்போபுர பகுதியில் தனது மனைவிக்குத் தொலைபேசி மூலம் தினமும் தொல்லை கொடுத்த நபரைத் தாக்கிய கணவரை, இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (12) உத்தரவிட்டார்.

அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காயங்களுக்குள்ளான நபர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X