2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மனைவியைத் தாக்கிய கணவனுக்குப் பிணை

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஜனவரி 15 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசத்தில், தனது மனைவியைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணவரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (14) அனுமதியளித்தார்.  

இந்நபரை, கோமரங்கடவெல பொலிஸார் கைதுசெய்து, நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போதே, நீதவான் சாமிலா ரத்ன நாயக்க, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று, நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .