2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தில் உள்வாங்குக’

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பிரதேசத்தில், மானிய அடிப்படையிலான வீடமைப்புத் திட்டத்தில் தம்மையும் உள்வாங்குமாறு கோரி, பிரதேச செயலகத்துக்கு முன்னால், ஆர்ப்பாட்டமொன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய்ப் பிரதேசத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மத்திரமே வீட்டு மானியங்கள் வழங்கப்படுகின்றனவெனவும், தம்மைப் புறக்கணிப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேனவிடம், மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .