2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மியன்மார் அரசாங்கத்தால் யானை அன்பளிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம், எப்.முபாரக்

மியன்மார்  அரசாங்கத்தால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 23 வயதுடைய 8 அடி உயரம் கொண்ட 3.5 தொன் நிறையுடைய யானை, கப்பல் மூலம் நேற்று (18) மாலை திருகோணமலை - அஷ்ரஃப் இறங்கு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பௌத்த துறவிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1,500 பொதிகளும் இதன்போது கொண்டு வரப்பட்டன.

துறைமுகத்தில் வைத்து, தியவதநிலமே நிலங்க டிய பண்டாரவால் பொறுப்பேற்கப்பட்ட இந்த யானை, கண்டி தலதா மாளிகைக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .