2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீன்பிடிப்பதை பார்க்க சென்ற சிறுவனை காணவில்லை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலை, கோணாவ குளத்தில் மீன்பிடிப்பதைப் பார்க்கச் சென்ற திருகோணமலை, மட்கோ பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவனைக் காணவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

கோணாவ குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று (19) இருவர் சென்ற நிலையில் குறித்த சிறுவனும் அவர்களுடன் சென்றுள்ளான் எனத் தெரியவருகின்றது.

குளத்தின் கரையில் இருந்த சிறுவனை, முதலை பிடித்திருக்கலாமென, பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

சிறுவனைத் தேடும் நடவடிக்கையில், ஹொரவ்பொத்தானை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .