2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாளியின் வீட்டில் நகைகள் திருட்டு; ஒருவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலைப் பகுதியில் 19 பவுன் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த 27 வயதுடைய நபரை, ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

குறித்த நபர், திருகோணமலையில் அமைந்துள்ள சில்லரைக் கடையொன்றில் வேலைசெய்து வந்த நிலையில், அங்தக் கடை முதலாளியின் வீட்டில் நகைகளைத் திருடிய வேளையில், முதலாளி கண்டு, நேற்று (03) பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X