2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 21 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக   முதிரைமரக் குற்றிகள் 15ஐக் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் 34 வயதுடைய ஒருவரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.                                         

ரஜஎல பகுதியிலிருந்து வட்டுக்கச்சி பகுதிக்கு சிறிய லொறியொன்றில் முதிரைக் குற்றிகளை கொண்டுசெல்வதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சோதனை நடத்தி இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து அம்முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.    

முதிரைக் குற்றிகளுடன் குறித்த லொறி, பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .