2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகத் தெரிவு

எப். முபாரக்   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர்,  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் கட்சியின் சட்ட உதவி செயற்பாட்டுப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (23) நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில், கட்சியின் தேசியத் தலைவர்  ரவூப் ஹக்கீமினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

லாஹீர், திருகோணமலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும், திருகோணமலை நீதிமன்றச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X