2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மொரவெவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 மார்ச் 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் டபிள்யூ.ஆர். றம்பண்டா, தனக்கு ஏற்பட்டிருந்த சிறுநீரக நோய்க்கு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்றுக் (11) காலமானார்.

1946ஆம் ஆண்டு பிறந்த இவர், 12 வருடங்களாக மொரவெவ பிரதேச சபையின் தவிசாளராகச் சேவையாற்றி வந்துள்ளார்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மொரவெவ பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவராகவும், 2004ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, மொரவெவ பிரதேச சபையின் தவிசாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .