2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி தாய் - மகன் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 20 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, பம்புறுகஸ்வெவ பகுதியில் வைத்து, இன்று (20) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், தாயாரான 38 வயதுடைய எஸ். பிசோமெனிக்கே, கால் உடைந்த நிலையிலும், அவரது மகனான 12 வயதுடைய தனுஷ், தலை, நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .