2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

யானை தாக்கி முதியவர் பலி

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்,அப்துல் சலாம் யாசிம்


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புலக்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த, 70 வயதுடைய முதியவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (09), அதிகாலை 3.30 மணியளவில் வீட்டுக்கு வெளியில் வந்த போது , வீட்டின் முற்றத்தில் நின்ற யானை அவரை  தாக்கியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த  முதியவர் ஸ்தலத்திலேயே  பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .