2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வருடாந்த உற்சவம் இம்முறை இல்லை

Editorial   / 2020 ஜூன் 21 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, தம்பலகாமம் ஆதிகோணஸ்வரர் கோவில் வருடாந்த திருவிழா, இம்முறை நடைபெறாது என, கொவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 28ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் திருவிழா ஆரம்பமாக இருந்த நிலையில் , நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ்  நிலைமையைக் கருத்திற்கொண்டு, இம்முறை திருவிழாவை கைவிடுவதற்கு  கோவில் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

எனினும், குறித்த நாள்களில் சிறப்பு அபிஷேக பூசை மட்டுமே நடைபெறும் எனவும் அடுத்த வருடம் கோவில் திருவிழா நடைபெறுமென, கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X