2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  

திருகோணமலை மாவட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,  தமது உறவுகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டுமென தெரிவித்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் வழியுறுத்தியும், மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயை  கருப்புத் துணியால் மறைத்தவாறு, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன..

திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மகஜரொன்றும்  மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X