2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வழக்குத் தவணைகளுக்கு சமுகளிக்காதவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் 12 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபர், பல வழக்குத் தவணைகளுக்கு சமுகளிக்கத் தவறியமையால், நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று முன்தினம் (07) உத்தரவிட்டார்.

ஸ்ரீவெதவாச்சி, பக்மிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மேற்படி சந்தேகநபர், 2012ஆம் ஆண்டு, சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில், இது குறித்த வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காமையால் பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்து, திருகோணமலை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .