2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக், ஏ.எம்.கீத்

திருகோணமலை, கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், குளத்துக்குப் பாதிப்புகள் ஏற்படாத விதத்தில், ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன்,  தம்பலகாமம், முள்ளிபொத்தனை, கிண்ணியா போன்ற தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யான் ஓயா நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், யான் ஓயா நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் பிரதீப் வெலிவிட தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .