2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி தங்கநகர் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிளொன்று, இன்று (16) பிற்பகல் 12 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதிகள்  இருவரும் காயமடைந்த நிலையில், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போதே, இவ்விபத்து இடம்பெற்றதாக, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து விசாரணைகளை, சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .