2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருநுவர, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்படை முகாமுக்கு அருகில் நேற்று (03) மாலை கெப் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், இலங்கைத்துறை முகத்துவாரம் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த (40) வயது மதிக்கத்தக்க நபரே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .