2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம், மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (12)  நடைபெற்றது.

கொவிட் 19 அசாதாரண நிலை காரணமாக, வெளிநாட்டு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், தேவையான உணவு உற்பத்தியை  போதுமானளவு பெறமுடியாமல் போயுள்ளதாக, மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினர்.

எனவே, வெளிநாட்டு உணவு உற்பத்தி இறக்குமதியை நம்பாமல், உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டுமெனவும் இதற்காக அரசாங்கத்தால் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளுக்குத் தேவையான சேவைகள், தொழிவ்நுட்ப உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமெனவும் மாவட்டச் செயலாளர் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .