2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விவசாயி சடலமாக மீட்பு

தீஷான் அஹமட்   / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், பூமாலவெட்டு வயல் பகுதியிலிருந்து, தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய விவசாயி ஒருவர், தலையில் சிறிய காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர், தனது வயலுக்கு வெள்ளிக்கிழமை சென்று இரவாகியும் வீடு திரும்பாமையால் ஊரவர்களும் உறவினர்களும் சேர்ந்து குறித்த வயல் பகுதியில்  தேடுதல் நடத்திய போதே, சனிக்கிழமை (13)  இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்த மேலதிக விசாரணைகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .