2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீதி செப்பனிடும் பணிகள் துரிதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நடுஊற்று எல்லை பட்டியங்குளத்திலிருந்து, நடுஊற்று வைத்தியசாலை வரையான வீதி, பாடசாலை வீதி (பரிகுட்டிவீதி) நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு வரும் நிலையில், அப்பாதையைச் செப்பனிடும் பணிகள், இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹாரின் உதவியுடன் இவ்வீதியைச் செப்பனிட்டு, மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், இனிவரும் காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X