2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளிநாட்டு மதுபானத்துடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2018 நவம்பர் 20 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற ஒருவரை இன்று(20) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையரெனவும், ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போதே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபரின், மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .