2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவர் கைது

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பகுதியில், 30 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சுமேதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவர், நேற்று (17) இரவு கைதுசெய்யப்பட்டாரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், சுமேதகம பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்து வருவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை, உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .