2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாளை நீர் வெட்டு

Editorial   / 2017 ஜூன் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தின் பல இடங்களில், நாளை திங்கட்கிழமை (19) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலங்கொட, பட்டபொல, எல்பிட்டிய, பலப்பிட்டிய மற்றும் கொஸ்கொட ஆகிய பகுதிகளில், நாளைக் (19) காலை 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் நீர்வெட்டு, தொடர்ந்து 15 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்குமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தென் மாகாணம், பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணியின் காரணமாகவே, இந்நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிவரை இது அமுலில் இருக்குமெனவும் சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X