2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்து: ஒருவர் பலி; ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனமொன்று, வெல்லவாய பிரதேசத்தில் வைத்து, எதிரே பயணித்த தனியார் பஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கெப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில், 43 வயதுடைய சுகாத் கித்சிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .