2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் பலி

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வெல்லவாய  வீதியில், சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

அம்பலாங்​கொடை ​நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சைக்கிளொன்றின் மீது மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமைந்த சிறுவன் அம்பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

அம்லாந்தோட்டை, வரலாந்த பிரசேத்தைச் சேர்ந்த 15 வயதுடைய தில்ஷான் சத்துரங்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்துடன் தொடர்புடைய கார் சாரதியைக் கைதுசெய்த பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .