2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

4 ஆவது மரணம் குறித்து வெளியான தகவல்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், இவர் இரத்மலானை-வெடிகந்தை பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் வைத்து நேற்று 02) உயிரிழந்தார். இவரும் இவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன், அண்மையில் இருவரும் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X