2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இவர்களை கண்டால் தகவல் வழங்கவும்

Editorial   / 2021 ஜனவரி 02 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை கல்லேல்ல விஞ்ஞானப்பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வந்தபோது தப்பியோடிய நீர்கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளில் ஐவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஏனைய நால்வரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் இன்றேல் 071-8591233 அல்லது 119 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திக விமலரத்ன (வயது 31) நாரம்மல, கெலும் ஹப்புஹாமி (வயது 26) மாரவில, புஷ்பகுமார (வயது 36) பொரலெஸ்ஸ மற்றும்  நிமல் வசந்த (வயது 52) வைக்கால.

இவர்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸ் திணைக்களம் இன்று (2) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X