2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்க் கட்சித் தலைவராக சஜித்; பச்சைக்கொடி காட்டினார் ரணில்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட சகல காரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக்கூட்டம், தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்போது, எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிவதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .