2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏழு முஸ்லிம்கள் உட்பட 17 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

Editorial   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது பேரும், மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களுக்கு எதிராக ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையிலேயே கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நௌபர் மௌவலி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சஜிட், மொஹமட் சஹீட், சதீக் அப்துல்லா, சனூல் அப்டீன், மொஹமட் மில்ஹான் ஆகியோரும் ஏனைய ஒன்பது பேருக்கு எதிராகவுமே இவ்வாறு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .